வியாழன், 21 அக்டோபர், 2010

காவலன் விஜய்க்கு கவுண்டமணி அட்வைஸ்!


நண்பர்களே..கீழ்கண்டவை அனைத்தும் கற்பனையே...விஜய்யும் கவுண்டரும் நண்பர்கள் போல பேசிக்கொள்வதால் சற்று மரியாதை குறைவாக இருக்கும் விஜய் ரசிகர்கள் பொறுத்தருள்க.அப்புறம் தமிழ்மணம் கருவிப்பட்டை ரொம்ப நாளைக்கு பிறகு வேலை செய்கிறது எனவே பதிவு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
விஜய் நடிக்கும் காவலன் ஷூட்டிங் ஸ்பாட்.அங்கு எண்டர் ஆகிறார் எள்ளல் நாயகன் ,நகைச்சுவை பேரரசு கவுண்டமணி...
ஹாய்..ஹாய்..ஹாய் எவரிபடி....’’
கவுண்டரை பார்த்ததும் ஆர்வமுடன் ஓடி வந்து சூழ்ந்து கொண்ட..டெக்னீசியன்கள்,தொழிலாளர்களை விலக்கிக்கொண்டு,விஜய் கேரவேனை நோக்கி செல்கிறார்,அதே நேரம் கேரவேனை விட்டு இறங்கிய விஜய் ய்யும் கவுண்டரை பார்த்து ஷாக் ஆகி..இந்தாளு எங்க இங்க வந்தார் என நினைக்கிறார்..விஜய்யை நெருங்கிய கவுண்டர்,
ஹல்லோ..போலீஸ்கார் குட்மார்னிங்?
வாங்கண்ணே..என்னது போலீஸ்கார்னு சொல்றீங்க..நான் இதுல செக்யூரிட்டிண்ணே...’’
அட..காவலன் னா போலீஸ்கார் தாம்பா..அப்போ நீ போலீஸ்சா நடிக்கலையா..செக்யூரிட்டியா..எப்படி...உன் இமேஜ் என்னாவறது..உங்கப்பன் டைரடக்கரு ஒத்துக்க மாட்டானே...’’
கதை நல்லாருந்துது..சரின்னுட்டார்’’

ஹே..பார்த்தியா நம்மகிட்டிய டகால்டி காமிக்கிறியே..அப்பனும் மவனும் என்னிக்குடா கதைய பார்த்தீங்க..வேற வழியில்ல..ஹிட் வேணும் னு ஒத்துக்கிட்டீங்க..பாலிஸா பேசியே..பதிவிசா அலையறிங்கடா..
’’
’’மெதுவா பேசுங்கண்ணே..எனக்குன்னு இமேஜ் இருக்கு..இன்னும் கோயமுத்தூர் ஷூட்டிங்க்ல பார்த்த விஜய் யாவே நினைக்காதீங்க..

ஓஹோ..இப்ப பெரிய ஆளாயிட்டியா...ரஜினியே என்ன பார்த்தா பம்முவாரு..நீ என்ன பிஸ்கோத்து...பின்னாடி ஏதாவது முளைச்சிருக்கா..எங்க திரும்பு பார்க்கலாம்..ஒண்ணும் காணமே...அப்புறம் என்ன...’’
உடம்பு சவுரியமெல்லாம் எப்படிண்ணே....’’

’’
அட..அத விட்டு தள்ளு கழுதை...ஆமா கோயமுத்தூர் மாப்ள ல நாம இரண்டு பேரும் ஜோடி போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குனோம்..சங்கவிய நீ தாக்கு தாக்குன்னு தாக்குன..அதையெல்லாம் இப்பவும் நினச்சு பார்த்தா குளுகுளு நு இருக்குது..’’

அட..என்னெண்ணே..நீங்க...அதையேல்லாம் நினெச்சுகிட்டு....’’
அட..என்னெண்ணே..நொண்ணேணேன்னுட்டு...மாப்ள..மாம்ஸ் னு கூப்பிடுப்பா..நாம எல்லாம் யூத்துப்பா....ஏம்பா...நம்ம ஜோடி காம்பினேசன் உனக்கு பிடிக்கலையா...’’

அது இல்லண்ணே..சங்கவி மேட்டர சொன்னேன்..
’’
சரி..சரி..இன்னிக்கு கிடைச்ச பிரியாணிய சேதாரமில்லாம சாப்பிடப்பார்க்கணும்..நேத்து சாப்பிட்ட பழைய சோறை மறந்துடணும்னு சொல்ற...புரியுது ..யூ கண்டினியூ...போட்டு தாக்கு...’’அப்புறம் அசின் அக்கா என்னா சொல்றாங்க..உர்ர்ர்ராசினியா ..ஓ..நீதான் சிவகாசியிலியே உராசு உராசுனு உரசிட்டியே....’’

ஹஹஹா..குறும்பாவே பேசாதீங்கண்ணே...எனக்கு படம் ஜெயிக்கணும்கிறதுதான் கவலையே....என் கவனமெல்லாம் அதுலதான்
’’
’’ச்சே..என்னப்பா..அசிங்க,அசிங்கமா பேசற..நாம என்னிக்கு படம் ஓடறத பத்தி கவலப்பட்டோம்..படம் ஓடுனா என்ன..பணம் போட்ட அந்த மொன்ன நாயி செத்தா நமக்கு என்ன..பேமண்ட் கொடுத்துட்டானா இல்லையா..கறுப்பு வெள்ளை பிரிச்சி வாங்கிட்ட இல்ல...ஓப்பனிங் சாங்,நாலு ஃபைட்,நாலு பாட்டு...தங்கச்சி பாட்டு,ஆத்தாகாரி பாட்டு எல்லாம் வெக்க சொல்லிட்டீல்ல..அரசியலுக்கு தோதா பில்டப் சீன் வைன்னு உங்கப்பன் டைரக்டரை கூப்பிட்டு மிரட்டினானா இல்லையா,சந்தானத்துக்கிட்ட ரெண்டு பிட்டு,விட்டு நடிக்க சொல்லி வாங்கிட்டியா’’

எல்லாம் பக்காண்ணே..
’’

அப்புறம் என்ன..அடுத்த படம் ..அடுத்த பேமண்ட்..அனுஸ்கா,தமனா னு போக வேண்டியதுதானே..
நம்ம ரசிக குஞ்சுமணிகளுக்கு நாலு குத்துப்பாட்டு,நாலு ஃபைட் இருந்தா போதும்..கோயமுத்தூர் மாப்ள.எனக்காகத்தான் ஓடுச்சுன்னு நியூஸ் வந்ததுக்கப்புறம் எந்த காமெடி நடிகனையும் நீ அண்டவே விடறதில்லைனு கேள்விப்பட்டேன்..வடிவேலு சீனை கூட ஒண்ட வெட்டிற சொல்லுறியாம்.இதெல்லாம் தப்புப்பா..ரஜினி ஆகணும்னு நினெக்கிற ரஜினி குணத்தையும் ஃபாலோ பண்ணனும்..நல்ல டைரக்டர்,நல்ல காமெடியன்..டைரக்டர் சொல்றதை மட்டும் கேட்டு செய்றதுன்னு இருந்தா நீயும் இன்னும் பெருசா வரலாம்பா..’’

சரிண்ணே..பேரன்,பேத்தியெல்லாம் எப்படி இருக்காங்க..?
’’

கவுண்டர் மனதிற்க்குள்(பேச்சை எப்படி மாத்துறாம் பாரு..நல்லது சொன்னா கேட்க மாட்டியே..உன் ரூட்லியே வர்றேன்..)

பேரன்,பேத்தியெல்லாம் நல்லா இருக்காங்கப்பா..அவங்க குறும்பு பண்ணும் போதெல்லாம் வில்லு பிரஸ் மீட்ல..ஷட் அப் நு நீ கத்துவியே...அந்த வீடியோவை போட்டு காட்டுவேன்..பொடுசுங்க அப்படியே கப்பு சிப்புனு அடங்கிரும்...இது பரவாயில்லை ..என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கடன்காரங்களை சமாளிக்கிறதுக்கு அந்த வாய்சைத்தான் காலர் டியூனா வெச்சிருக்கானாம்.ஃபோன் பண்ற கடன்காரங்க...டரியல் ஆயிடுறானுங்களாம்...’’

விஜய் சுதாரித்துக்கொண்டு,டேய்..அண்ணனுக்கு ஆரஞ்ச் ஜூஸ் கொடுறா சரிண்ணே
...நேரமாச்சு....ஷூட்டிங் போறேன்’’

ஓகேம்மா...
’’

கவுண்டரும் கிளம்புகிறார்..என்னமோ ஷூட்டிங் கிறானுக..வேலைங்கிறானுக..ஒரே குஸ்டமப்பா...சரி அடுத்து யாரை பார்க்கலாம் என சிந்தித்தபடியே செல்கிறார் கவுண்டர்...